-3 C
New York
Friday, February 13, 2026

மரம் முறிந்து படுகாயம் அடைந்த சிறுவன் மரணம்.

புயற் காற்றினால், ரோமெய்ன்மோட்டியர்  காட்டில் முறிந்து விழுந்த மரக் கிளையில் சிக்கி காயமடைந்த 15 வயது சிறுவன் மரணமாகியுள்ளார்.

கடந்த ஜூன் 15ஆம் திகதி பிற்பகல் 2:25 மணியளவில், வீசிய புயற்காற்றின் போது. தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஜெனிவாவைச் சேர்ந்த சிறுவன், Lausanne பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles