புயற் காற்றினால், ரோமெய்ன்மோட்டியர் காட்டில் முறிந்து விழுந்த மரக் கிளையில் சிக்கி காயமடைந்த 15 வயது சிறுவன் மரணமாகியுள்ளார்.
கடந்த ஜூன் 15ஆம் திகதி பிற்பகல் 2:25 மணியளவில், வீசிய புயற்காற்றின் போது. தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஜெனிவாவைச் சேர்ந்த சிறுவன், Lausanne பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.