கிரான்ஸ் – மொன்டானா தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், லு கொன்ஸ்டெல்லேஷன் பார் உரிமையாளர்களை சுற்றிவளைத்து, தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
வலெய்ஸ் மாகாணத்தின் சியோனில் உள்ள எனர்ஜிபோலிஸ் வளாகத்திற்கு விசாரணைக்கு வந்தபோது, ஜாக் மற்றும் ஜெசிகா மோரெட்டி ஆகியோருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூச்சலிட்டனர்.
“கொலையாளிகள்” “நீங்கள் என் மகனைக் கொன்றீர்கள்”, “என் சகோதரனைக் கொன்றீர்கள்”, “என் மகன் எங்கே?”, “நீங்கள் அரக்கர்கள்”, “உங்களால் எப்படி சாப்பிட அல்லது தூங்க முடிந்தது?” என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
மூலம்- swissinfo

