பனிப்பாறைச் சரிவில் புதையுண்டு போன பிளாட்டன் கிராமத்தின், டென்மேட்டன் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.
அதனை முறைப்படி அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக வலய்ஸ் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
அது, பேரழிவை ஏற்படுத்திய பனிப்பாறைச் சரிவிற்குப் பிறகு காணாமல் போன ஆடு மேய்ப்பவரான டோனி (64) என்பவரின் சடல எச்சங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மூலம்- 20min.