பெர்ன் கன்டோனில் உள்ள ஹிண்டல்பாங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட முயல்கள் மற்றும் பறவைகள் உயிரிழந்துள்ளனர்.
விலங்குகள் தங்குமிடம் அமைந்திருந்த அடுக்குமாடி கட்டிடம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் இங்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்த நேரத்தில், தீப்பிழம்புகள் ஏற்கனவே குடியிருப்பு கட்டிடம் முழுவதற்கும் பரவியிருந்தன.
வீட்டில் வசிப்பவர்கள் வெளியேறி பாதுகாப்பான இடத்தை அடைய முடிந்தது. இருப்பினும், தங்குமிடத்தில் இருந்த சிறிய விலங்குகளை மீட்க முடியவில்லை.
மூலம்- bluewin