லிம்மட்டில் நேற்றுப் பிற்பகல் 3:30 மணியளவில் நீச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நீந்திக் கொண்டிருந்தவர் காணாமல் போனதை அடுத்து அவரைத் தேடுவதற்காக கீழ்நோக்கி உள்ள அனைத்து பாலங்களிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
மாலை 6:30 மணிக்குப் பின்னர் 65 வயதான போர்த்துகீசிய நபர் சூரிச் கன்டோனல் காவல்துறையின் ஹெலிகொப்டர் மூலம் டயட்டிகான் அருகே கண்டுபிடிக்கப்பட்டார்.
கன்டோனல் கடல்சார் காவல்துறையினரால் மீட்கப்பட்ட போது அவர் இறந்து விட்டார்.
இந்த விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மூலம்- bluewin

