லெங்க் இம் சிமென்டலில் (லெங்க் நகராட்சி) பராகிளைடிங் விபத்தில், லூசெர்னைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை, மதியம் 12:35 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக பெர்ன் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
பாராகிளைடர் விமானி லெங்க் இம் சிமென்டலில் உள்ள மெட்ஸ்ஸ்டாண்ட் ஏவுதளத்திலிருந்து புறப்பட்டார்.
பாராகிளைடிங் விமானி வாலைஸ்வெங்கே பகுதியில் விபத்துக்குள்ளானார்.
லூசெர்ன் மாகாணத்தைச் சேர்ந்த 55 வயதான சுவிஸ் நபர் விபத்து நடந்த இடத்திலேயே பலத்த காயங்களால் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.

