15.8 C
New York
Thursday, September 11, 2025

1000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு கிடைக்கப் போகும் வாக்குரிமை.

2026 முதல், மௌடியர்,  ஜூரா கன்டோனின் ஒரு பகுதியாக மாறவுள்ள நிலையில், 1,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதி பெறவுள்ளனர்.

ஜூராவில், வெளிநாட்டவர் நகராட்சி மற்றும் பிராந்திய அளவில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவார்கள்.

திங்கட்கிழமை சுமார் 50 பேருக்கு அவர்களின் புதிய வாக்குரிமைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மௌடியர் அதிகாரப்பூர்வமாக ஜூராவின் ஒரு பகுதியாக மாறுவதற்கு முன்னர், இந்த ஆண்டு ஜூரா மாகாணத்தில் உள்ள நகராட்சி மற்றும் மண்டல தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை  வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும்,

குறிப்பாக ஒக்டோபரில் நடைபெறும் ஜூரா கன்டோன் தேர்தல்களில் அவர்கள் வாக்களிக்க முடியும்.

பெர்ன் கன்டோனைப் போலல்லாமல், ஜூரா கன்டோன், சுவிட்சர்லாந்தில் பத்து வருடங்களாகவும், கன்டோனில் ஒரு வருடமாகவும் வசித்து வரும் வெளிநாட்டவர்கள், கன்டோன் விடயங்களில் வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது.

மௌட்டியரில் பதிவுசெய்யப்பட்ட 2,100 வெளிநாட்டவரில், அதாவது மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 30% பேரில், 1,100க்கும் மேற்பட்டோர் விரைவில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியும் என்று மேயர் மார்செல் வினிஸ்டோர்ஃபர் தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தருணத்திற்காகக் காத்திருக்கும் மக்களை நான் அறிவேன்.

புதிய வாக்காளர்கள் ஒக்டோபரில் மௌட்டியரில் நடைபெறும் இரண்டு நகராட்சி தேர்தல்களிலும் பங்கேற்கலாம்.

உங்கள் நகரத்தின் அரசியல் வாழ்க்கை குறித்து உங்கள் கருத்தை வெளிப்படுத்த உங்களுக்கு உரிமை இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles