முன்ச்விலனில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்தார்.
ஃபிரான்ஃபெல்டர்ஸ்ட்ராஸ் வழியாக ஃபிரான்ஃபெல்ட் நோக்கி செவ்வாய்“ மாலை 5:30 மணியளவில் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று முர்க்டால்ஸ்ட்ராஸ் அருகே போக்குவரத்து சிக்னலில் வலதுபுறம் திரும்பியபோது, மிதிவண்டியில் சென்ற பெண் மீது மோதியதாக துர்காவ் கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
42 வயதான சுவிஸ் பெண் விபத்தில் மிக மோசமாக காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மூலம்- 20min

