5.3 C
New York
Tuesday, December 30, 2025

சுவிஸ் பெடரல் ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல்.

சுவிஸ் பெடரல் ரயில்வேயின் தலைமை நிர்வாக அதிகாரி வின்சென்ட் டுக்ரோட்டுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் குழுமமான சீமென்ஸுக்கு 2.1 பில்லியன் பிராங் மதிப்புள்ள 116 புதிய டபுள்-டெக்கர் ரயில்களுக்கான கொள்வனவு கட்டளையை வழங்கிய பிறகு, அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.

இது சுவிஸ் ரயில்வே உற்பத்தியாளரான ஸ்டாட்லருக்கு பாதகமாக அமைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் டுக்ரோட் மீது தேசத்துரோக குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

இதனால் பல நாட்கள் அவருக்கு பாதுகாப்பு தேவைப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களை வழங்காமல் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக ஃபெடரல் ரயில்வே தெரிவித்தது.

ஃபெடரல் ரயில்வே இயக்குனர் தனிப்பட்ட பாதுகாப்பு கோருவது மிகவும் அசாதாரணமானது.

Related Articles

Latest Articles