வங்கி இரகசியத்தை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட Inside Paradeplatz இணையத்தளம் மீதான விசாரணையை சூரிச் சட்டமா அதிபர் கைவிட்டுள்ளார்.
பத்திரிகை ஆதாரங்களைப் பாதுகாப்பது, இந்த வழக்கில் முக்கிய விடயங்களில் ஆதாரங்களை வழங்குவதைத் தடுக்கிறது என்று சட்டமா அதிபர் கூறினார்.
- Advertisement -

இதையடுத்து வங்கி இரகசியத்தை வெளியிட்டதாக சந்தேகத்தின் பேரில், Inside Paradeplatz பத்திரிகையாளருக்கு எதிரான நடவடிக்கைகள் டிசம்பர் 8 ஆம் திகதி நிறுத்தப்பட்டன.
முன்னாள் ரைஃபைசன் வங்கி முதலாளி பியரின் வின்சென்ஸின் தவறான நடத்தை குறித்து Inside Paradeplatz அறிக்கையிட்டதில் தனது தனியுரிமை மீறப்பட்டதாக அவர் முறையிட்டிருந்தார்.
மூலம்- swissinfo


