பெர்னில் உள்ள ஈரானிய தூதரை வரவழைத்து, ஈரானில் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரானிய பாதுகாப்புப் படையினர் நடத்திய வன்முறை குறித்து சுவிட்சர்லாந்து அரசாங்கம் தனது “ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்தியுள்ளது.
இத்தகைய வன்முறை மற்றும் இவ்வளவு குறுகிய காலத்தில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான இறப்புகள் குறித்து கூட்டாட்சி வெளியுறவுத் துறை (FDFA) தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
நேற்று ஈரானிய தூதுவரிடம், எந்தவொரு மரண தண்டனைக்கும் சுவிட்சர்லாந்து “வலுவான” எதிர்ப்பை தெரிவிப்பதாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு சுவிட்சர்லாந்து ஏற்கனவே திங்களன்று ஈரானிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
மனித உரிமைகள் மற்றும் அனைத்து போராட்டக்காரர்களின் அடிப்படை சுதந்திரங்களும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
மூலம்- swissinfo

