0.7 C
New York
Wednesday, February 11, 2026

மீளப்பெறப்பட்ட பால்மா – விசாரணையை தொடங்கியுள்ள சுவிஸ் அதிகாரிகள்.

செருலைட் நச்சு கலந்த குழந்தை பால் பொருட்களுக்கும், சமீபத்திய நாட்களில் குழந்தைகளில் தோன்றிய நோய்களின் அறிகுறிகளுக்கும் இடையிலான தொடர்பு உள்ளதாக என்பது குறித்து சுவிஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சர்வதேச உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகள், சீன நிறுவனத்திடமிருந்து விநியோகிக்கப்பட்ட மாசுபட்ட மூலப்பொருள் குறித்து, கன்டோனல் அதிகாரிகள் உணவு நிறுவனங்களுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகம் (FSVO) தெரிவித்துள்ளது.

இது வெளிநாட்டு கூட்டாளி அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் FSVO உடன் நெருக்கமான ஆலோசனையுடன் இடம்பெறுகிறது.

சுவிட்சர்லாந்தில் பாதிக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் அடையாளம் கண்டு சந்தையில் இருந்து அகற்றுவதே இதன் நோக்கமாகும்.

விநியோகச் சங்கிலிகளின் சிக்கலான தன்மை காரணமாக, மற்ற தயாரிப்புகள் செருலைட் மாசுபாட்டால் பாதிக்கப்படுவதை முழுமையாக நிராகரிக்க முடியாது என்று FSVO தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் மாசுபட்ட குழந்தை பால் பொருட்களை திரும்பப் பெறுவது தாமதமானது என்று நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளை விமர்சித்துள்ளது.

சீனாவின் ஒரு விநியோகஸ்தரின் மூலப்பொருட்களில், நெஸ்லே, டானோன் மற்றும் லக்டலிஸ் உள்ளிட்ட பல குழந்தை பால் தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்களில் குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் செருலைட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது டசின் கணக்கான நாடுகளில் பால்மாவை திரும்பப் பெறுவதற்கு வழிவகுத்துள்ளது மற்றும் பெற்றோர்களிடையே கவலைகளை எழுப்பியுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles