செல்லுபடியாகும் சுவிஸ் நுழைவு ஆவணங்கள் இல்லாமல் ஒன்பது பயணிகளை சூரிச்சிற்கு கொண்டு வந்ததற்காக 144,000 பிராங் அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிராக, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் ஏர் கனடா தோல்வியடைந்துள்ளது.
தேவையான பயண ஆவணங்கள் இல்லாதவர்களை சுவிட்சர்லாந்திற்கு கொண்டு வந்ததற்காக, 2015 ஆண்டு முதல் இடம்பெயர்வுக்கான அரச செயலகம் ஏர் கனடாவுக்கு பல முறை தடைகள் விதிக்கப்பட்டது.
முதல் மீறல் எச்சரிக்கைக்கு வழிவகுத்தாலும், பின்னர் பல சந்தர்ப்பங்களில் ஒரு பயணிக்கு 4,000பிராங் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டில், தற்கொலை அச்சுறுத்தல் விடுத்த 14 பேரை ஏர் கனடா ஏற்றி வந்தது. மீண்டும் மீண்டும் குற்றங்கள் செய்ததால், ஒரு நபருக்கு 16,000 பிராங் வீதம் மொத்தம் 224,000 பிராங் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படவில்லை.
இருப்பினும், 2019 ஆம் ஆண்டில், தற்கொலை அச்சுறுத்தல் விடுத்த ஒன்பது நபர்களுக்கு விதிக்கப்பட்ட 144,000 பிராங் அபராதத்திற்கு எதிராக விமான நிறுவனம் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில், குறைபாடற்ற பாதுகாப்பு அமைப்பின் ஆதாரங்களை ஏர் கனடா வழங்கத் தவறிவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

