18 C
New York
Tuesday, March 31, 2026

500 கிலோ கோகைன் கடத்தல்- 3 பேருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

சுவிட்சர்லாந்தில் 500 கிலோ கோகைன் கடத்தலுடன் தொடர்புடைய மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு சுவிஸ் மாகாணத்தில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக பாசல்-கன்ட்ரி குற்றவியல் நீதிமன்றம் இவர்களுக்கு சிறைத்தண்டனையை விதித்தது.

மூன்று அல்பேனிய பிரதிவாதிகளுக்கும் 15 ஆண்டுகள், 17 ஆண்டுகள் மற்றும் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அரச வழக்கறிஞர்கள் கோரினர்.

போதைப்பொருள் தொடர்பான சட்டத்தை மீறிய பிரதிவாதிகளை குற்றவாளிகள் என்று கண்டறிந்த நீதிபதிகள் அவர்களை 15 ஆண்டுகள் சுவிட்சர்லாந்திலிருந்து நாடுகடத்தவும் உத்தரவிட்டனர்.

31, 32 மற்றும் 34 வயதுடைய அந்த ஆண்கள், சுவிஸ் பரிமாற்ற முனையத்தில் கோப்பி நிரப்பப்பட்ட கொள்கலனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கோகோயினை மீட்க மூன்று முறை முயன்றனர். அந்தக் கொள்கலன் பிரேசிலில் இருந்து ஆண்ட்வெர்ப் வழியாக சுவிட்சர்லாந்திற்கு வந்திருந்தது.

இறுதியாக அது சுவிட்சர்லாந்தின் ரோமண்டில் உள்ள நெஸ்பிரெசோ தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது, அங்கு கோகோயின் கண்டுபிடிக்கப்பட்டது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles