வலாய்ஸ் மாகாணத்தில் உள்ள கோபன்ஸ்டீனுக்கு அருகிலுள்ள ஒரு வீதி பனிச்சரிவில் புதைந்து போனதால், லோட்சென்டல் பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ரோட்லோய்வி கலரியில் பனிச்சரிவு ஏற்பட்டதாக வியாழக்கிழமை காலை 11.40 மணிக்கு தகவல்கள் கிடைத்ததாக வலாய்ஸ் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால், பி.எல்.எஸ் லாட்ச்பெர்க் ரயில் சேவை, கார் போக்குவரத்து நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.பள்ளத்தாக்கு சாலை இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் யாராவது காயமடைந்தார்களா அல்லது வேறு ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்று பொலிசாரால் இன்னும் உறுதியாக கூற முடியவில்லை.
மூலம்- swissinfo

