ஃப்ரிபோர்க் மாகாணத்தில் உள்ள கெர்சர்ஸில் நேற்று மாலை போஸ்ட்பஸ் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் நான்கு பயணிகள் மற்றும் ஒரு துணை மருத்துவர் என 5 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஒருவர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தீ விபத்து ஒரு நபரால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதாக தற்போது பொலிசார் நம்புகின்றனர். விசாரணை நடந்து வருகிறது.
காயமடைந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
உறவினர்களுக்காக 0800 261 700 என்ற தொலைபேசி எண்ணை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
பஸ் டியூடிகனில் இருந்து கெர்சர்ஸுக்கு சென்று கொண்டிருந்தது. மொத்த பயணிகளின் எண்ணிக்கை குறித்து காவல்துறையினரால் இன்னும் எந்த தகவலையும் வழங்க முடியவில்லை.
மூலம்- swissinfo

