ஈரானில் போர் வெடித்ததில் இருந்து சுவிட்சர்லாந்தில் டீசலின் சராசரி விலை 8.6% அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் 95 டீசல் மிகவும் மிதமான அளவில் 3.7% அதிகரித்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் டூரிங் கிளப் ஒப் சுவிட்சர்லாந்து (TCS) விலை ரேடாரிலிருந்து கிடைத்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள சுமார் 3,200 பெட்ரோல் நிலையங்களைக் கண்காணிக்கும் பயனர் சமர்ப்பிப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கருவியாகும்.
கடந்த பத்து நாட்களில், ஈரானில் ஏற்பட்ட மோதல் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் கடுமையான கொந்தளிப்பைத் தூண்டியுள்ளது.
இதன் விளைவுகள் சுவிட்சர்லாந்திலும் உணரப்பட்டதாக TCS புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. டீசலின் சராசரி விலை பிப்ரவரி 28 அன்று 1.75 பிராங்காக இருந்து, மார்ச் 9 அன்று 1.90 பிராங் ஆக உயர்ந்தது.
ஈயமற்ற 95 டீசல் சராசரியாக 1.70 பிராங் ஆக உயர்ந்து, 6 சென்டிம்கள் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் ஈயமற்ற 98 டீசல் விலை 3.4% இல் சற்று குறைந்து 1.83 பிராங்கை எட்டியது. டீசல் விலையில் ஏற்பட்டுள்ள வலுவான உயர்வு, தொழில்துறை தேவை அதிகரிப்புடன் தொடர்புடையது என்று டிசிஎஸ் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மூலம்- swissinfo

