28.8 C
New York
Friday, August 14, 2026

அதிகரிக்கும் வாடகை- பெருமளவு குடும்பங்களுக்கு சுமை.

சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் வாடகை பல குடும்பங்களுக்குப் பெரும் சுமையாக அமைந்துள்ளன. சுவிஸ் வாடகைதாரர்கள் சங்கத்தின் (MVS) கூற்றுப்படி, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களிலும், அனைத்து மொழிப் பிராந்தியங்களிலும் வீட்டுச் சந்தையின் நிலைமை தற்போது பதற்றமாக உள்ளது.

சுவிஸ் வாடகைதாரர்கள் சங்கம் நடத்திய வீட்டுவசதி கணக்கெடுப்பில் பதிலளித்த 34,441 பேரில் கிட்டத்தட்ட 40% பேர், தங்கள் குடும்ப வருமானத்தில் 30%-க்கும் அதிகமாக வாடகைக்காகச் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இது, பலருக்கு வறுமை அபாயத்தை ஏற்படுத்துகிறது என்றும் MVS தெரிவித்துள்ளது.

சுமார் இருபது பேரில் ஒருவர், தங்கள் குடும்ப வருமானத்தில் பாதிக்கும் மேலான தொகையை வீட்டுச் செலவுகளுக்காகச் செலுத்துகிறார். இந்த பதற்றமான நிலைமை தற்போது சுவிட்சர்லாந்து முழுவதும் நிலவுகிறது.

கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் சுமார் 70% பேர் தங்கள் வீட்டு உரிமையாளருடன் பிரச்சினைகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இருப்பினும், பெரும்பாலான வாடகைதாரர்கள், உறவில் விரிசல் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால், வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்டரீதியான சவால்களை முன்வைப்பதில்லை என்றும் MVS கூறுகிறது.

கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் முக்கால்வாசியினர் தற்போது ஒரு குடியிருப்பைத் தேடவில்லை. இருப்பினும், மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்டோர் தாங்கள் கடைசியாக வீடு தேடியபோது அது கடினமாக இருந்ததாக தெரிவித்தனர்.

ஜெனீவா மற்றும் டிசினோ மாகாணங்களில் தங்குமிடம் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles