சூரிச்சில் உள்ள கோசாவு நகராட்சியின் ஒட்டிகான் பகுதியில் உள்ள ஒரு மறுசுழற்சி மையத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
89 வயதான ஓட்டுநர் ஒருவர், இன்னும் அறியப்படாத காரணங்களுக்காக வாகனத்தை வேகமாக முடுக்கி, நேராக ஒரு அலுவலகக் கொள்கலன் மீது மோதியுள்ளார்.
அந்தக் கொள்கலனுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த 66 வயதான பெண் வாகனத்தின் அடியில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில், விமானம் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தீயணைப்புத் துறையினர் அவரை இக்கட்டான நிலையிலிருந்து மீட்டனர். அவரது காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக, அவர் மீட்பு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஓட்டுநரும், அலுவலகக் கொள்கலனுக்குள் இருந்த ஒரு நகராட்சி ஊழியரும் காயமின்றி தப்பினர்.
சூரிச் மாகாண காவல்துறை, அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து, விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகிறது.
மூலம்- bluewin

