சூரிச்சின் ஹின்வில்லில் உள்ள ஒரு சுற்றுவட்டத்தில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற துருப்புக்காவி ஒன்று கவிழ்ந்த விபத்தில் இராணுவப் பயிற்சி கல்லூரியைச் சேர்ந்த நான்கு படைவீரர்கள் காயமடைந்தனர்.
அவர்களில் ஒருவர் ரெகா ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு வான்வழியாகக் கொண்டு செல்லப்பட்டார்.
புதன்கிழமை மதியம், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துருப்புக்காவி வாகனம், பெட்ஸ்ஹோல்ஸ் வட்டச்சந்தியில் பக்கவாட்டில் கவிழ்ந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்தில் வேறு எந்த வாகனங்களும் சம்பந்தப்படவில்லை.
ஏராளமான அம்புலன்ஸ்களும் ரெகா வான்வழி அம்புலன்ஸ் சேவையும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இராணுவ காவல்துறையினரும் சம்பவ இடத்தில் இருந்தனர். இந்த விபத்து குறித்து இராணுவ நீதி அமைப்பு தற்போது விசாரித்து வருவதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
மூலம்- bluewin

