வாட் மாகாணத்தின் பலேசியூ-வில்லேஜ் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் காளை மாடு தாக்கியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை சுமார் 8 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
45 வயதான போலந்து நாட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் திறந்தவெளி அடைப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஒரு காளை அவரைத் தாக்கியுள்ளது.
காளை அவரை வேலியின் மீது தள்ளி மிதித்தது. உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக வாட் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
உரிமையாளர் உடனடியாக காளையை இறைச்சிக் கூடத்திற்கு அனுப்பியுள்ளார்.
மூலம்- bluewin

