சூரிச்சில் உள்ள ஓஃபிகான் நகராட்சியின் கிளாட்ப்ரக் என்ற இடத்தில், குறைந்தது ஒருவர் காயமடைந்த ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை சுமார் 5 மணியளவில், அடுக்குமாடிக் கட்டிடத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.
பின்னர் அம்புலன்ஸ்களும் காவல் வாகனங்களும் அங்கு வந்தன. கனரக ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தைச் சுற்றி வளைத்தனர், காயமடைந்த ஒருவர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
ஓஃபிகானில் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையும், காயமடைந்த ஒருவர் கண்டெடுக்கப்பட்டதையும் சூரிச் மாகாண காவல்துறை உறுதி செய்தது.
இருப்பினும், இதில் துப்பாக்கிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தினர். அந்த நபரின் காயங்கள் துப்பாக்கிகளால் ஏற்படவில்லை. மேலதிக விவரங்கள் குறித்து விசாரணை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min

