5.1 C
New York
Monday, April 20, 2026

இன்று செக்செலௌட்டன் திருவிழா- சிறுவர்கள் பேரணியைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

செக்செலௌட்டன் திருவிழா (Sechseläuten festival) சூரிச்சில் இன்று நடைபெறுகிறது. ஊர்வலம் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது, மாலை 6 மணிக்கு பூக் (Böögg) எரியூட்டப்படும்.

இதற்கு முந்தைய நாளான நேற்று குழந்தைகள் ஊர்வலம் நடைபெற்றது.

5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பாரம்பரிய அல்லது வரலாற்று உடைகளை அணிந்து சூரிச்சின் தெருக்களில் ஊர்வலமாகச் சென்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 குழந்தைகளும் 800 இசைக்கலைஞர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

இதனைக் காண வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles