குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர தொலைபேசி உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய அவசர உதவி எண் மே மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் 142 என்ற எண்ணை அழைக்கலாம்.
இதன் ஊடாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரமும் தொழில்முறை உதவியும் ஆலோசனையும் வழங்கப்படும். இது, கூட்டாட்சி கவுன்சிலர் எலிசபெத் பாம்-ஷ்னைடர் அவர்களால் தொடங்கப்பட்ட குடும்ப, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான தேசிய தடுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
மூலம்- 20min

