பிரான்சின் எவியான் நகரில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் காரணமாக, சுவிட்சர்லாந்து மீண்டும் தற்காலிகமாக எல்லைச் சோதனைகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த நடவடிக்கை ஜூன் 10 முதல் 19 வரை அமுலில் இருக்கும்.
எல்லைச் சோதனைகளை அறிமுகப்படுத்தும் முடிவை சுவிஸ் அரசாங்கம் இன்று அறிவித்தது.
உச்சிமாநாடு பிரான்சில் நடைபெற்றாலும், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் லோசான் நகரங்களும், ஜெனீவா ஏரிப் பகுதி முழுமையும் சில பாதுகாப்பு அபாயங்களுக்கு உள்ளாகின்றன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முந்தைய ஜி7 கூட்டங்கள் வன்முறை மோதல்கள், இடையூறுகள், நாசவேலைகள் மற்றும் சொத்து சேதங்களுக்கு வழிவகுத்தன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான சர்வதேச அமைப்புகள் இருப்பதும், பொதுவாக நிலவும் பதட்டமான புவிசார் அரசியல் சூழலும் சவால்களை முன்வைக்கின்றன.
எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான விண்ணப்பம் ஜெனீவா மாகாணத்தால் சமர்ப்பிக்கப்பட்டது. ஜி7 உச்சிமாநாடு ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறும்.
மூலம்- swissinfo

