வாலெய்ஸ் மாகாணத்தின் கொலம்பே-முராஸ் பகுதியில், டாமோயில் சுத்திகரிப்பு ஆலையின் கடைசி இரண்டு கோபுரங்கள் வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 2 மணியளவில் வெடிபொருட்கள் மூலம் தகர்க்கப்பட்டன.
பார்வையாளர்கள் அந்த இடத்தில் கூடி, பாதுகாப்பான தூரத்திலிருந்து இந்த நிகழ்வைக் கண்டுகளித்தனர்.
அந்த இரண்டு கோபுரங்களும் கிட்டத்தட்ட 100 மீட்டர் உயரமும், இரண்டும் சேர்ந்து 4,000 தொன்களுக்கும் அதிகமான எடையும் கொண்டவையாக இருந்தன.
மூலம்- 20min

