24.3 C
New York
Tuesday, May 26, 2026

மலையேறும் குழுவினர் மீது விழுந்த மரம்- இளைஞன் பலி, இருவர் காயம்.

வஷ்வார்ஸீயில் உள்ள சீவைட்பாக் நீர்வீழ்ச்சிக்கு அருகே நேற்று மலையேறுபவர்கள் குழு மீது ஒரு மரம் விழுந்த சம்பவத்தில், பெர்ன் மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர்.

மாநில காவல்துறைக்கு நேற்றுப் பிற்பகல் சுமார் 2:30 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ரோந்துப் படையினர், சென்ஸ் மாவட்ட தீயணைப்புப் படை மற்றும் ஷ்வார்ஸீ மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கினர்.

உடனடி உயிர்காப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு அம்புலன்ஸ் மற்றும் ஒரு ரெகா ஹெலிகொப்டரும் அனுப்பப்பட்டன.

ஃபிரிபர்க் மாகாணத்தைச் சேர்ந்த ஏழு வயது குழந்தை மற்றும் அவரது 42 வயது தந்தை ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் பாதை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும்.

விபத்தின் சரியான சூழ்நிலைகளைத் தெளிவுபடுத்த அதிகாரிகள் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles