பாசல் நகரில் உள்ள ரெய்னாச்சர்ஸ்ட்ராஸ் தெருவில் இருந்த ஒரு கியோஸ்கில் வெள்ளிக்கிழமை மதியம் 2:35 மணிக்கு, ஆயுதமுனைக் கொள்ளை இடம்பெறுள்ளது.
அடையாளம் தெரியாத குற்றவாளி ஒருவர் கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டியுள்ளார்.
அந்த நபர் பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களைத் திருடிவிட்டு, தப்பிச் சென்றார். அந்த ஊழியருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. பாசல்-ஸ்டாட் மாகாண காவல்துறையினர் உடனடியாக நடத்திய தேடுதல் வேட்டை இதுவரை வெற்றி பெறவில்லை.
சந்தேக நபர் ஜெர்மன் மொழி பேசக்கூடியவர் என்றும், அவர் கருமையான, நடுத்தர நீளமுள்ள, சுருள் முடி மற்றும் மூன்று நாள் தாடியுடன் காணப்பட்டார் என்றும் விவரிக்கப்படுகிறார்.
குற்றம் நடந்த நேரத்தில், அவர் கருப்பு நிற ஷார்ட்ஸ், சிவப்பு அச்சுடன் கூடிய கருப்பு நிற ஹெவி மெட்டல் டி-ஷர்ட், கருப்பு நிற பந்தனா, கருப்பு நிற பேஸ்பால் தொப்பி, கருப்பு நிற நெக் வார்மர் மற்றும் சைக்கிள் சங்கிலி போன்ற வெள்ளி நிற நெக்லஸ் ஆகியவற்றை அணிந்திருந்தார்.
மூலம்- 20min

