ஜூன் 12 முதல் 17 வரை பிரான்சில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஜெனீவா, வாட் மற்றும் வாலைஸ் மாகாணங்களுக்கு சுமார் 4,000 சுவிஸ் இராணுவ வீரர்கள் உதவவுள்ளனர்.
எவியானைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதியில் உள்ள சிவில் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்க சுவிஸ் இராணுவம் உதவும்.
“இந்த நிகழ்வின் போது, பிரெஞ்சு மொழி பேசும் மாகாணங்களின் சிவில் பாதுகாப்பு அமைப்புகளுக்குப் பணிச்சுமையைக் குறைப்பதே இராணுவத்தின் முக்கியப் பணியாக இருக்கும். இதன் மூலம் காவல்துறையினர் தங்கள் பணியில் கவனம் செலுத்த முடியும்,” என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
ஜெனீவா சர்வதேச விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஆதரவளிப்பதும் இதில் அடங்கும்.
விமானப்படையும் தனது ஆயுதமேந்திய வான்வழி காவல் சேவையை வலுப்படுத்தும். ஜூன் 10 முதல் 18 வரை வான்வெளி கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்.
உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பல உயர்மட்டப் பிரதிநிதிகள், ஜெனீவா ஏரியைக் கடந்து எவியானுக்குச் செல்வதற்கு முன்பு ஜெனீவா விமான நிலையத்தில் தரையிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏரி மற்றும் முக்கிய சாலைகளைக் கண்காணிக்கும் பணியில் இராணுவம் ஈடுபடும்.
இது இணையக் களம், ட்ரோன்களுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் அணு, உயிரியல் மற்றும் இரசாயன (NBC) பாதுகாப்பு ஆகியவற்றில் தனது திறன்களையும் வழங்கும்.
மூலம்- swissinfo

