சனிக்கிழமை மதியம் முஹ்லாவ் அருகே ராய்ஸ் ஆற்றில் படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து ஐந்து வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.
இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகளை ஏற்றிச் சென்ற அந்தப் படகு, முன்னதாக ஆற்றில் இருந்த ஒரு மரத்தில் மோதியது.
பெரியளவிலான தேடுதல் பணி இதுவரை வெற்றி பெறவில்லை என்று ஆர்காவ் காவல்துறை தெரிவித்தது.
இரண்டு பெரியவர்கள் மற்றும் ஐந்து, ஏழு வயதுடைய இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு குடும்பம் அந்த காற்றடைக்கப்பட்ட படகில் இருந்ததாக ஆர்காவ் மாகாண காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
படகு கவிழ்ந்த பிறகு, பெற்றோரும் ஏழு வயது சிறுமியும் நீந்தி கரைக்கு வந்தனர். ஐந்து வயது சிறுவன் காணாமல் போயுள்ளான்.
சிறுவனைத் தேடும் பணி பல மணி நேரம் நீரிலும், வானிலும், கரையிலிருந்தும் தொடர்ந்தது. “துரதிர்ஷ்டவசமாக, அவன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தத் தேடுதல் பணியில், பல்வேறு காவல் ரோந்துப் படைகள், ஒரு ரெகா ஹெலிகொப்டர், பல காவல் ட்ரோன்கள், மற்றும் படகுடன் வந்த ப்ரூக் பிராந்திய காவல் துறையின் ஆற்று மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
மூலம்- swissinfo


