ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த இந்த ஆண்டின் ஆர்ட் பாசல், 90,000 பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த நவீன மற்றும் சமகால கலைக் கண்காட்சியில் 43 நாடுகளைச் சேர்ந்த 290 கலைக்கூடங்கள் இடம்பெற்றிருந்தன.
அனைத்துத் துறைகளிலும் மற்றும் விலை வரம்புகளிலும் கண்காட்சி சிறப்பான விற்பனையைப் பதிவு செய்துள்ளதாக ஆர்ட் பாசல் அறிவித்தது.
மேலும், இந்த ஆண்டின் 56-வது பதிப்பு, சர்வதேச கலைச் சந்தைக்கான மைய வருடாந்த சந்திப்பு இடமாக பாசலின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்றும் அது கூறியது.
103 நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் வந்திருந்தனர், குறிப்பாக ஐரோப்பாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலானோர் வருகை தந்திருந்தனர்.
வட மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து சேகரிப்பாளர்கள் மற்றும் கலை வல்லுநர்களும் கண்காட்சியில் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
270-க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் கலைக் கண்காட்சி வியாழக்கிழமை பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.
இருப்பினும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘ஃபர்ஸ்ட் சாய்ஸ்’ மற்றும் ‘பிரிவியூ’ நிகழ்வுகளின் போதும், புதன்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவின் போதும், முந்தைய நாட்களிலேயே முக்கிய விற்பனைகள் முடிவடைந்திருந்தன.
மூலம்- swissinfo


