சுவிட்சர்லாந்தில் ஆரே நதியின் நீரால் குளிர்விக்கப்படும் இரண்டு பெஸ்னா அணு உலைகள், நதி நீர் அதிக வெப்பமடைந்ததன் காரணமாக மின் இணைப்பிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த முடிவை ஒக்ஸ்போ என்ற எரிசக்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இரண்டு உலைகளும் தற்போது நிறுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக ஒக்ஸ்போ கூறியது. ஆரே நதியின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை எட்டியது, இது போதுமான அளவு குளிர்விக்க அனுமதிக்காது.
இரண்டு உலைகளின் உற்பத்தியும் செவ்வாய்க்கிழமையன்றே குறைக்கப்பட்டிருந்தது – மிக சமீபத்தில் 50% ஆகக் குறைக்கப்பட்டது. குளிர்விக்கும் நீர் முழுமையாகக் கலக்கப்பட்ட பிறகு, புதன்கிழமையன்று ஆரே நதியின் வெப்பநிலை முதன்முறையாக 25 டிகிரியை எட்டியது.
ஆரே நதி குளிர்வடைவதற்கான வாய்ப்பு இல்லையென்றால், வெள்ளிக்கிழமையன்று உலைகள் முழுமையாக நிறுத்தப்படும் என்று ஒக்ஸ்போ சுட்டிக்காட்டியிருந்தது.
டோட்டிங்கனில் உள்ள ஆரே தீவில் அமைந்துள்ள இந்த இரண்டு உலை அலகுகளும், ஜூலை 2025-இல் ஏற்கனவே தற்காலிகமாக மின் உற்பத்தியை நிறுத்தியிருந்தன.
மூலம்- swissinfo


