சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ் மாகாணத்தில் ஒருமுறை பயன்படுத்தும் மின்னணு சிகரெட்டுகளின் விற்பனை மீதான தடை செல்லுபடியாகும் என கூட்டாட்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுவிஸ் புகையிலை வர்த்தக சங்கம், பிலிப் மோரிஸ் சுவிட்சர்லாந்து மற்றும் பிற தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீடுகளை நாட்டின் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஒருமுறை பயன்படுத்தும் மின்னணு சிகரெட்டுகளுக்கான தடை 2025 மே மாதம் முதல் அமுலில் உள்ளது.
வலாய்ஸ் மாகாண நாடாளுமன்றம் 2024-ல் இது தொடர்பான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது. இது ஒருமுறை பயன்படுத்தும் மின்னணு சிகரெட்டுகளின் விற்பனையைத் தடை செய்து, அபராதத்தையும் விதித்தது.
இந்த விதிமுறை கூட்டாட்சி சட்டத்துடன் இணக்கமாக உள்ளது என்று கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர்.
இந்த விதிமுறை சுற்றுச்சூழலையும் பொது சுகாதாரத்தையும் பாதுகாக்க உதவுகிறது. இதுபோன்ற பொருட்களைத் தடைசெய்ய சுவிஸ் அரசாங்கத்திற்கு அதிகாரம் இருந்தாலும், அது இன்னும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை.
எனவே, மாகாணங்கள் தாங்களாகவே தடைகளை விதிக்க அனுமதிக்கப்படுகின்றன.
மூலம்- swissinfo


