31.4 C
New York
Thursday, July 16, 2026

பாசல் அருங்காட்சியகத்தில் கருணைக் கொலை செய்யப்பட்ட கொரில்லா.

சிறுநீர் கழிக்க முடியாதபடி கடுமையான காயங்களுக்கு உள்ளான 11 வயது ஆண் கொரில்லா மொபாலியை பாசல் மிருகக்காட்சிசாலை கருணைக்கொலை செய்துள்ளது.

14 வயதான, ஆதிக்க குணம் கொண்ட ஆண் கொரில்லாவான யேபா, அதன் பிறப்புறுப்பில் கடித்து காயப்படுத்தியதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பாசல் மிருகக்காட்சிசாலைக்கு வந்த யேபாவுக்கும், கருத்தடை செய்யப்பட்ட ஆண் கொரில்லாவான மொபாலிக்கும் இடையே தொடர்ச்சியான சண்டைகள் நடந்துள்ளன.

மற்ற மிருகக்காட்சிசாலைகளில் இதுபோன்ற மோதல்கள் ஏற்படும் என்று அனுபவங்கள் சுட்டிக்காட்டவில்லை. இதனால் போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles