22.2 C
New York
Friday, July 24, 2026

சுவிசின் கடைசி டை தயாரிப்பு நிறுவனமும் மூடப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் எஞ்சியிருக்கும் கடைசி டை தயாரிப்பு நிறுவனமான சூரிச்சைத் தளமாகக் கொண்ட பாக்மன் க்ராவட்டன் ஏஜி (Bachmann Krawatten AG) , மூடப்படவுள்ளது.

70 ஆண்டுகள் வணிகத்தில் இருந்த இந்த நிறுவனம், மூடப்படுவதால் பதினொரு ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழப்பார்கள்.

முன்னர், பணியிடம், பல்கலைக்கழகம் அல்லது முறையான நிகழ்வுகள் எனப் பல இடங்களில் டை அணிவது கட்டாயமாக இருந்தது. இருப்பினும், பல தசாப்தங்களாக அதன் முக்கியத்துவம் குறைந்து வருகிறது என்று நிறுவனத்தின் இயக்குநர் பீட்டர் பாக்மன் கூறினார்.

தமது நிறுவனம் மூடப்படுவதை அவர் உறுதிப்படுத்தினார்.

கோவிட்-19 பெருந்தொற்று, தேவையை மேலும் குறைத்திருந்தது. மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ததால், ஊழியர்கள் டை அணிவார்கள் என்று சிலரே எதிர்பார்த்தனர். பெருந்தொற்றுக்குப் பிறகு சிறிது காலம் வணிகம் சற்றே மீண்டாலும், சமீபகாலமாக அது மீண்டும் ஒரு நிலையான சரிவுப் போக்கில் உள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles