அமெரிக்கா, இறக்குமதி செய்யப்படும் ட்ரோன்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் மீது 100% வரை புதிய சுங்க வரிகளை விதிக்கிறது.
இந்த இறக்குமதி வரி குறிப்பாக சீன உற்பத்தியாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது, ஏனெனில் அவர்கள் அமெரிக்க சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, 25 கிலோகிராமுக்கு மேல் அதிகபட்ச டேக்-ஆஃப் எடை கொண்ட ட்ரோன்களுக்கும், வெப்பப் படமெடுக்கும் கமராக்கள் பொருத்தப்பட்ட மாதிரிகளுக்கும் இந்த 100% சுங்க வரி பொருந்தும்.
25 கிலோகிராம் வரையிலான அதிகபட்ச டேக்-ஆஃப் எடை கொண்ட மற்ற ட்ரோன்களுக்கு 25% சுங்க வரி விதிக்கப்படும். பெரும்பாலான சுங்க வரிகள் செப்டம்பர் 3 அன்று அமுலுக்கு வரும்.
சுவிட்சர்லாந்து, அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா, தைவான் மற்றும் லிச்சென்ஸ்டீன் ஆகிய நாடுகளிலிருந்து வரும் ஏற்றுமதிகளுக்கு, சுங்க வரி 15% ஆக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனுக்கு 10% கட்டணம் பொருந்தும்.
இது, ட்ரோன்கள் அல்லது பாகங்கள், பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மற்றும் பாகங்களின் தோற்றம் தொடர்பான சில தேவைகளைப் பூர்த்தி செய்வதைப் பொறுத்தது.
மூலம்- swissinfo


