ரஷ்யாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தளவாட மையங்கள் மீது உக்ரைன் நடத்திய பெரும் தாக்குதல்களைத் தொடர்ந்து, மொஸ்கோ கடுமையான பதிலடி கொடுக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
“ரஷ்யப் பொருளாதாரத்திற்கு எதிரான தாக்குதல்கள் மூலம் உக்ரைன், ‘பண்டோராவின் பெட்டியை’ – அதாவது பேரழிவின் ஊற்றைத் – திறந்துவிட்டது, கீவ் இப்போது ‘பூதத்தை புட்டியிலிருந்து வெளியே விட்டுவிட்டது’.
பதிலடி நடவடிக்கைகள் வருவதற்கு அதிக காலம் ஆகாது. அவை உங்களுக்குக் கிடைக்கும்.
ரஷ்ய இராணுவத்தின் நடவடிக்கைகள் இன்னும் அதிகமாகக் கவனிக்கத்தக்கதாகவும் அழிவுகரமானதாகவும் இருக்கும்.
மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன், ரஷ்யப் பொருளாதாரத்தை அழிப்பதற்கான தனது 40 நாள் திட்டத்தில் உக்ரைன் தோல்வியடைந்து விட்டது.
ரஷ்ய மக்களின் ஒற்றுமை அழிக்கப்படவில்லை, சேதம் ஏற்பட்டுள்ள போதும், போர்க்களத்தின் சூழ்நிலையில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்றும் புடின் கூறினார்.
மூலம்- 20min


