22.5 C
New York
Thursday, June 19, 2025

யாழில் இளம் வைத்தியர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய இளம் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் 30 வயதான பிரேமேந்திரராஜா கிரிசாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்றையதினம் (12-06-2024) மதியம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக கொழும்பில் வசித்து வருகின்றனர்.

குடும்பத்தினரின் மூட நம்பிக்கையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் உயிரை மாய்த்துக் கொண்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செல்வந்த குடும்பத்தை சேர்ந்த இவர், குடும்பத்தில் ஒரே மகனாவார். நேபாளத்தில் மருத்துவ கல்வியை முடித்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக, காதல் தொடர்பில் இருந்து வருகிறார். அவரது காதலியும் வைத்தியராவார்.

உயிரை மாய்த்த வைத்தியரின் ஜாதகப்படி இப்போதைக்கு திருமணம் செய்யக்கூடாது என தாயார் தடுத்து வந்ததாகவும், மேலும் 3 அண்டுகளுக்கு பின்னரே திருமணம் செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், உடனடியாக திருமணம் செய்ய காதலி விரும்பியிருந்தார். இந்த மன அழுத்தத்திலிருந்தவர் இன்று உயிரை மாய்த்துள்ளார்.

வைத்தியர்களின் தங்கும் விடுதி அறைக்குள், மயக்க மருந்தை தனது கால் விரல்களுக்குள் செலுத்தி விட்டு, அறையை பூட்டிவிட்டு படுத்துள்ளார்.

அவர் கடந்த சில நாட்களின் முன்னரே, சத்திர சிகிச்சைக் கூடத்தில் மயக்க மருந்து செலுத்துவது குறித்து, தொடர்புடைய வைத்தியர்களிடம் நுணுக்கமாக கேட்டறிந்துள்ளார்.

அவரது தங்கும் விடுதிக்குள் மயக்க மருந்து போத்தலின் மூடி என கருதப்படும் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இருப்பினும், மருந்து போத்தல் காணப்படவில்லை. தற்கொலைக்கு முன்னதாக வைத்தியர் அதை மறைத்திருக்கலாமென கருதப்படுகிறது.

Related Articles

Latest Articles