எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நேற்று காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமோக வெற்றியீட்டுவார் என்றும், அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.