16.4 C
New York
Tuesday, March 31, 2026

சூரிச் பிரைட் அணிவகுப்பில் ட்ரக்கை மோதி தாக்கத் திட்டமிட்ட சிறுவர்கள்.

சூரிச் பிரைட் அணிவகுப்புக்கு முன்னர் அச்சுறுத்தல்களை விடுத்து பொலிசாரால் காவலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினால் தீவிரமயமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும், ஜூன் 15 ஆம் திகதி பிரைட் அணிவகுப்புக்கு முன்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்னமும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவரின் குடும்பம் ஈராக்கிலிருந்து வந்துள்ளது. மற்றொன்று பால்கன் நாட்டில் இருந்து வந்தது.

பயங்கரவாதக் குழுவான ஐ.எஸ் அமைப்பில் இணைவது குறித்தும், எப்படி தாக்குதல் நடத்தலாம் என்றும் அவர்கள் சமூக ஊடகங்களின் மூலம் விவாதித்துள்ளனர்.

17 வயதான சிறுவன் ஒரு டிரக்கைப் பயன்படுத்தி, சூரிச் பிரைட் அணிவகுப்பில் புகுந்து தாக்குதலை நடத்தவும் திட்டமிட்டிருந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles