யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பிபிஎன் சொகுசு பேருந்து மீது, மாங்குளம் பகுதியில் லொறி ஒன்று மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்து பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் பனிக்கன்குளம் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பேருந்தில் பயணித்தவர்கள் இறங்கிபின்புறமாக நின்று கொண்டிருந்த போது அதே திசையில் வந்த லொறி ஒன்று அவர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலை மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.