றிக்கன்பச் சுல்சில், நேற்று மாலை இரண்டு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில், ஐந்து பேர் காயமடைந்தனர்.
நேற்று மாலை 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் ஒரு காரில் பயணம் செய்த இரண்டு குழந்தைகளும், ஓட்டுநரும் காயமடைந்தனர்.
மற்றைய காரில் இருந்த இரண்டு பேரும் காயமடைந்தனர்.
காயமடைந்த 4 பேர் நோயாளர் காவு வண்டிகள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தினால் அப்பகுதி வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
சூரிச் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.