25.8 C
New York
Thursday, June 26, 2025

குடியிருப்புத் தொகுதியில் பாரிய தீவிபத்து.

துர்கோ கன்டோனில், Bischofszell  இல் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிலையங்கள் அமைந்துள்ள கட்டடத்தில் நேற்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர். எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

கடும் புகை மூட்டத்தால் அப்பகுதி காவல்துறையினரால் தடை செய்யப்பட்டது.

கடும் புகை காரணமாக வீடுகளில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடவும், காற்றோட்டத்தை அணைக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தீவிபத்தை அடுத்து அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மூலம் – The swiss times

Related Articles

Latest Articles