Lausanne புறநகரில் Prilly-Malley பகுதியில் கட்டுமானம் இடம்பெற்றுக் கொண்டிருந்த 19 மாடிக் கட்டடம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த சாரம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
19 மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த சாரம் முழுவதுமாக இடிந்து விழுந்ததில், அதற்குள் பலர் அகப்பட்டதாக Vaud பொலிசார் தெரிவித்தனர்.
உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன.
ஹெலிகொப்டர்கள், அம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.
கட்டுமான சிதைவுகளில் இருந்து 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இன்னமும் பலர் சிதைவுகளுக்குள் அகப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுவதால் தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன.