Soazza அருகே, A13 நெடுஞ்சாலையில் கார்களை ஏற்றிச் சென்ற வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தீவிபத்தில் டிரக்கில் ஏற்றிச் செல்லப்பட்ட அனைத்து கார்களும் தீப்பிடித்து எரிந்து நாசமாகின.
இதையடுத்து குறித்த வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
தீவிபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள பொருள் சேதம் மிக அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் – 20min.