சூரிச்சின் பிரதான ரயில் நிலையம் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை சூரிச் நகருக்கு விடுக்கப்பட்ட கடுமையான வானிலை எச்சரிக்கை அமுலில் உள்ளது.
சூரிச் பகுதிக்கு மூன்றாவது நிலை ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், நீர்நிலைகள் மற்றும் மின்னல் தாக்குதல்களுக்கு உள்ளாக கூடிய இடங்களைத் தவிர்க்குமாறும், MeteoSwiss பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையில், சூரிச் பிரதான ரயில் நிலைய கட்டடம்,மீது நேற்று மாலை 5 மணியளவில் மின்னல் தாக்கியது.
அதேவேளை, Zollikonஇல் கடும் ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மூலம் – zueritoday