சுவிற்சர்லாந்தின் சூரிச் விமான நிலையம் பயணிகளால் நிரம்பி வழிகின்றது.
கோடைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில், சுவிற்சர்லாந்து நாட்டவர்கள் வெளிநாடுகளுக்கும், ஏனைய நகரங்களுக்கும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக சூரிச் விமான நிலையத்தில் பயணிகள் நெரிசலாக காணப்படுகின்றனர்.
நேற்று அதிகளவு பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சூரிச் விமான நிலையத்தில் இவ்வாறான நெரிசல் காணப்படுகிறது.
மூலம் – Zueritoday