18 C
New York
Friday, September 12, 2025

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் சூரிச் ஆய்வாளர்களின் அரிய கண்டுபிடிப்பு.

உடலில் உள்ள செல்களை ஆக்கிரமிப்பு கட்டி செல்களாக மாற்றும் ஒரு சமிக்ஞை பாதையை சூரிச் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.

சூரிச் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய உதவும்.

எபிடெலியல் செல்கள் என்று அழைக்கப்படும் இவை, தோல் மற்றும் சளி சவ்வுகளின் மேல் செல் அடுக்கு மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது.

புற்றுநோய் முன்னேறும்போது, ​​​​இந்த செல்கள் தங்கள் சொந்த திட்டத்தைத் தொடங்கி, ஆக்ரோசமாக செயற்படத் தொடங்கும் என, சூரிச் பல்கலைக்கழகம்  தெரிவித்துள்ளது.

இந்த சமிக்ஞை பாதையின் கண்டுபிடிப்பு, தோல், பெருங்குடல், சிறுநீர்ப்பை மற்றும் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவும்.

இந்த ஆராய்ச்சியளர்கள் குழு 150 புற்றுநோய் மரபணுக்களை ஆய்வு செய்தது.

புற்றுநோய் மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகள் உடலில் உள்ள உயிரணுக்களின் நடத்தையை எவ்வாறு மாற்றுகின்றன என்பதைப் பற்றிய முறையான நுண்ணறிவுகளை வழங்குவதற்கான மிகப்பெரிய ஆய்வு இதுவாகும் என்றும், சூரிச் பல்கலைக்கழகம்  தெரிவித்துள்ளது.

மூலம் -Swissinfo

Related Articles

Latest Articles