Appenzell Ausserrhoden, Urnäsch இல் சனிக்கிழமை பிற்பகல் ஒரு மாடியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இருப்பினும், பல இலட்சம் பிராங்குகள் சொத்து சேதம் ஏற்பட்டதாக கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் 70க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
மூலம்.- bluewin